கஞ்சாவிற்கான தடையை கூட நீக்க முடியவில்லை!
73 வருடங்கள் கடந்தும் ஆங்கிலேயர்களினால் அமுல்படுத்தப்பட்ட கஞ்சா தடை சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் எவ்வாறு சுதந்திர இனம் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது பொதுபல சேனா அமைப்பு.
இது தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் சிகரட் நிறுவனங்களை கொண்டு வரும் நோக்கிலேயே, ஆங்கிலேயர்கள் கஞ்சாவை தடை செய்தனர்.
இலங்கை சுதந்திரமடைந்து 73 வருடங்களாகின்ற போதிலும், கஞ்சாவிற்கு ஆங்கிலேயர்களினால் விதிக்கப்பட்ட தடையை நீக்கிக் கொள்ள முடியாதுள்ளது
கஞ்சா என்பது சிறந்ததொரு மூலிகை மருந்து. அப்படியிருக்கையில் 73 வருட தடையை நீக்க முடியாத எமக்கு என்ன சுதந்திரம் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை