காதலர்களுக்கு இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

 


காதலர் தினத்தில் நடத்தப்படும் விருந்துபசாரங்கள், களியாட்டங்களில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார்.


இதன்படி 13ம், 14ம் திகதிகளில் நாடு முழுவதும் காதலர் தினத்தை ஒட்டி சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வெளியிலும் களியாட்ட நிகழ்வுகள் விருந்துபசாரங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.


இவற்றை கண்காணிக்கவும், திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொலிஸ் புலனாய்வு பிரிவு களமிறக்கப்பட்டிருக்கின்றது.


சமூக வலைத்தளங்கள் ஊடாக களியாட்டங்கள், விருந்துபசாரங்களை நடத்த திட்டமிட்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றதாகவும்


உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் முன் ஒப்புதல் இல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முடியாது என்றும் அஜித் ரோஹானா கூறினார்.


ஹோட்டல்கள் அல்லது விருந்தினர் மாளிகைகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக தங்கள் வளாகத்தை வழங்கியதாகக் கண்டறியப்பட்டால், அத்தகைய இடங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


இதேவேளை நாட்டில் விருந்துபசாரங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் ஏராளமான மக்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எனவே, பொதுக் கூட்டங்களைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அவை கொவிட் -19 தடுப்பு குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.