நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!


 உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல புதிய திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளார்.

அதன்படி 3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேவேளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய இராணுவத்திடம் ஒப்படைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2640 கோடி செலவில் கல்லணை கால்வாயை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் 1000 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.