பேரணியில் சிக்கிய வாள்வெட்டுக்குழு!

 


யாழில் சு.கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்ற நிலையில் ஒருவர் சிக்க, மற்றையவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும், இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் கவனப்படுத்தவும் நேற்றுமுன்தினம் தமிழர் பகுதிகளில் பல போராட்டங்கள் நடந்தன.


இந்த நிலையில், இதற்கு எதிராக இராணுவ பின்னணியில் யாழ் நகரில் சிறு குழு கோசமிட்டது. முன்னாள் வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரின் தலைமையில், மேலும் சிலர் அதில் கலந்து கொண்டனர்.


இவ்வாறு கலந்துகொண்டவர்களில் சிலர் பல்வேறு வழக்கு விவகாரங்கள் நிலுவையில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதில் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என இருவரை பொலிசார் மடக்கிப்பிடிக்க முயல ஒருவர் தப்பியோடிய நிலையில் . மற்றவர் சிக்கியதுடன் அவர்கள் இருவரும் வாள்வெட்டுகுழுரௌடிகள் என தேடப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களும் கலந்துகொண்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.