நானெனும் நான் -கவிதை!!
ஓசையற்று நகரும்
தாரகைகளில் தான்
எத்தனை ஒளிக்கீறல்கள்....
வெண் சங்குகள்
ஒருபோதும்
வீம்பு கொள்வதில்லை....
அந்தி மந்தாரைகளில்
அடுக்குகள் இல்லை - ஆனால்
அழகற்றவை அல்லவே....
சிரிப்பென்பது
சிந்தனையற்ற நிலையின்
அறிமுகமே....
காட்டு மலர்களுக்கும்
கடவுள் அழகை
கொடுத்திருக்கிறார்.
மனமந்திகளின் தாவல்
மதியீனத்தின்
மறுவடிவே....
உன் செயல்களுக்கு
நீயே காரணகர்த்ததா....
உன் இருப்புணர்வே
உன் சொர்க்கமாகிறது...
அது உன் சுதந்திரம் - அதில்
மகிழ்ச்சி கொள்....
நான் என்பது
நானேதான்.......
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை