'சித்தி 2 'சீரியலில் இருந்து ராதிகா விலகிய காரணம் இதுதானா?


 நடிகை ராதிகா சமீபத்தில் 'சித்தி 2’ சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'சித்தி 2’ என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும் முடிவை வருத்தத்துடன் எடுத்திருக்கிறேன் என்றும், இத்தனை ஆண்டுகளில் மிகச்சிறந்த உழைப்பை கொடுத்த சீரியல் இது என்பது எனக்கு பெருமையே என்றும், என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் குட் பை என்று சொல்லி அந்த சீரியல் இருந்து அவர் விலகினார்.


இந்த நிலையில் ’சித்தி 2’ சீரியல் இருந்து ராதிகா விலகியது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் ராதிகா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் முழுநேர அரசியல்வாதியாக மாற ராதிகா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் அவர் ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக அவர் ’சித்தி 2’ சீரியல் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே தேர்தல் நேரத்தில் மட்டும் பிரச்சாரம் செய்துள்ள ராதிகா தற்போது முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.