இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு நபர்!

 


இலங்கையில் தொடர்ந்து தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு நபரொருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், தங்காலை-மாரகொல்லிய பகுதியில் பதிவாகியுள்ளது.

68 வயதான வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.