யாழில் விபத்து: வங்கி உதவி முகாமையாளர் உயிரிழப்பு!

 யாழ்ப்பாணம்- நல்லூர், வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.