கொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்!

 நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 155 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 240 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 864 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.