இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பி.வி சிந்து..!


 நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த “ஓல் இங்கிலாந்து” பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஆரம்பமானது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா செக்கை சந்தித்தார். 

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சிந்து முதல் சுற்றை 21-11 என கைப்பற்றியதோடு, தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய சிந்து இரண்டாவது சுற்றை 21-17 என கைப்பற்றி அதிரடி ஆட்டமாக மாற்றினார்.

இந்நிலையில், விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியின் இறுதியில், பி.வி.சிந்து 21-11, 21-17 என்ற நேர் சுற்றுகளில் சோனியாவை வென்றதோடு,  குறித்த போட்டி சுமார் 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.