தீவிரவாதத்தை ஊக்குவித்த ஒருவர் கைது


 கண்டி, மாவனெல்ல பகுதியில் தீவிரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 44 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிட்ரேடஸிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தபோது, அவரது நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்காக அவர் நன்கொடைகள் மற்றும் நிதிகளை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் கைதான நபரிடமிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மடிக் கணினியொன்றையும் கைப்பற்றியுள்ளனர். 

விசாரணையில் சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் உறவினருடன் அவர் தொடர்புபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.