இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி!


 மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கென்னத் ரோத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்கு பெரும் வெற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 22இற்கு 11 என்ற அடிப்படையில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கான எந்த பொறுப்புக்கூறலும் இல்லை என்பதை மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளதுடன் ராஜபக்க்ஷ அரசாங்கத்தை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.