கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு!

 


கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 22ஆயிரத்து 880பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 43ஆயிரத்து 590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ல் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுவரை எட்டு இலட்சத்து 98ஆயிரத்து 934பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.