24 ஆம் திகதி திருமணம் ,ஊரே சோக வெள்ளத்தில் !!
வவுனியா மரக்காரம்பளை பகுதியிலிருந்து நேற்றையதினம் சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவு நாயற்றுப் பகுதியில் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் நேற்றையதினம் முல்லைத்தீவுக்கு சென்ற நிலையில் நேற்றையதினம் (07) நாயாறு பகுதியில் நீராடியிருக்கின்றனர்.
அதன் போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் வயது 29 இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் போன நிலையில் காணாமல் போயிருந்தார்.
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை