கொரோனா தொற்றிலிருந்து மேலும் 243 பேர் குணமடைவு!


 நாட்டில் இன்று சனிக்கிழமை மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88,388 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் 91,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள  நிலையில், அதில் 2,615 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 270 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 558 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.