எதிர்வரும் 3 நாட்களுக்குள் ஏற்படவுள்ள மாற்றம்!


இலங்கையில் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் இடம்பெற்ற பசறை விபத்து அனைவரையும் உலுக்கி எடுத்த சம்பவமாக பதிவாகியுள்ளது.

தற்போது கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 8 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன உறுதி செய்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 30 முதல் 40 வரையானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், பாதுகாப்பின்றி வாகனம் செலுத்துதல் மற்றும் வாகனங்களில் காணப்படுகின்ற கோளாறுகளே விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், பழுதான டயர்களுடன் வாகனங்களை செலுத்துதல் மற்றும் கோளாறுகளுடன் வாகனங்களை செலுத்துதல் தொடர்பில் ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பசறை விபத்து 15 பேரை காவு கொண்டதன் பின்னர், குறித்த இடத்தில் தற்போது பாதுகாப்பு வேலிகள் மும்முரமாக போடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.