கடந்த 80 நாட்களில் விபத்துக்களால் 501 பேர் பலி!


இந்த ஆண்டின் கடந்த 80 நாட்களில் வீதி விபத்துகளினால் 501 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகன விபத்துகளினால் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கு சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்த வேண்டுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.