விவசாயி ஒருவர் உள்ளூர் துப்பாக்கியுடன் கைது!


மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு தெரிவித்தனர்.

காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தலைமையிலான குழுவினர் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்

இதன்போது வீட்டின் வெளிப்பகுதியிலுள்ள மரங்களுக்கு கீழ் பொலித்தீனால் சுற்றி மரங்களுக்கிடையில் ஓளித்துவைத்திருந்த நிலையில் துப்பாக்கியை மீட்டதுடன் 42 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.