இலங்கை கொரோனா பரவலில் சீனாவை முந்தியது!


இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளது.

சீனாவில் இதுவரையில் 90,099 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு இலங்கையில் 90,200 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது,

உலக தரப்படுத்தலில் இலங்கை 87வது இடத்திலும் சீனாவின் 88வது இடத்திலும் உள்ளது.

அத்துடன், நாட்டில் நேற்றைய தினம் 342 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 85,630 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் இதுவரையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 90,200 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 86, 759 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 2,895 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.