புதிய முகக்கவசங்கள் இலங்கையில்

 


பேராதெனிய பல்கலைக்கழக நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் உலகின் முதல் புதிய முகக் கவசங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(03) கண்டியில் குறித்த முககக் கவசத்தை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த முகக் கவசங்களை சர்வதேச சந்தைக்கு வெளியிடுவதற்காக தூதரகங்களுடன் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.