நிறவெறி குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தும் அரண்மனை!


ஹரி மற்றும் மேகன் ஆகியோரால் சுமத்தப்பட்ட நிறவெறிக் குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்துவதாக Buckingham அரண்மனை தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதி செயற்படவுள்ளதாகவும் அரண்மனை கூறியுள்ளது.

முன்னைய நிகழ்வுகளை நினைவுகூருவது மாறுபட்டிருந்தாலும், அவை தனிப்பட்ட முறையில் அறிக்கையிடப்பட்டிருக்க வேண்டுமென அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

குழந்தையினுடைய நிறம் எவ்வாறிருக்கும் என ஹரியிடம் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்ததாக, நேர்காணல் ஒன்றில் சீமாட்டி மேகன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அரண்மனை வௌியிட்டுள்ள அறிக்கையில் சீமாட்டி மேகன் மீது அரச குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் மேகன் ஆகியோர் வழங்கிய நேர்காணலையடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலையை தொடர்ந்து, அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான அவசர கலந்துரையாடலொன்று நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றிருந்தது.

இந்தக் கலந்துரையாடலையடுத்து, இளவரசர் மற்றும் சீமாட்டி ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான குறித்த அறிக்கையை Buckingham அரண்மனை வௌியிட்டிருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.