சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் மீது தாக்குதல்!
சட்டத்துறையில் கல்விபயிலும் இறுதி ஆண்டு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தவகையில் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பேலியகொடை பொலிஸ் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அன்று மிகார குணரத்ன என்ற சட்டத்துறை மாணன் மீது தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர், ஜனாதிபதி ஆலோசகர் மைத்ரி குணரத்னவின் மகன் மற்றும் சட்டத்தரணி சரித குணரத்னாவின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரைப் பார்க்க பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 10 பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை