தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!


ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழில்நுட்பமயப்படுத்துவதற்கான (ஒன்லைன்) விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியிலான இலங்கை ' என்ற வேலைத்திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அரச நிறுவனங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சேவை பெறுனர்களின் விருப்பத்தின் பேரில் , தேசிய அடையள அட்டை தகவல்களை ஒன்லைன் மயப்படுத்த இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் , இலங்கை வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, டயலொக் நிறுவனம், சம்பத் வங்கி, ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியா, எச்.எஜ்.பி.சி. உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஓய்வூதியத் திணைக்களம் , ஹட்டன் நெஷனல் வங்கி உள்ளிட்டவற்றுடனும் ஒப்பந்தம் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நபர்களின் அடையாளத்தை பிழையின்றி மிக சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதோடு , துரித சேவையையும் வழங்கக் கூடியதாக இருக்கும் என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.