விவசாயிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திக்ரி, சிங்கு, காசிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாகப் பல துறைகளைச் சேர்ந்த பெண்களும் போராட்டங்களில் அவ்வப்போது பங்கேற்றனர்.

வேளாண்துறையிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் பங்களிப்பு உள்ளது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.