வல்லரசுகளின் பிடியில் இலங்கை!


சீன மின் திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய பொருளாதாரம் , நாட்டு மக்களின் பொருளாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது மாத்திரமே இவர்களின் தேவையாக உள்ளது.

எதிர்வரும் தேர்தல்களிலும் இந்த அரசாங்கம் இதனையே செய்யும். ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

ஆட்சியை பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள்ளேயே அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து 40 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் இலங்கையில் அமைந்துள்ள தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவுடனான முரண்பாடுகள் மேலும் வலுவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையில் பாரிய போட்டியிருப்பது உலகில் அனைவரும் அறிந்த விடயங்களாகும்.

அந்த போட்டியில் சிக்கியுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. இது மிகவும் பாரதூரமான அச்சுறுத்தலாகும். இது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.