வெளிநாட்டுவாழ் இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்த அதிஸ்டம்!
பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியானது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்து 579.7 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம் உயர்ந்துள்ள தொடர்ச்சியான பத்தாவது மாதம் இதுவாகும்.
இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை 675.3 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கை பெற்றது.
இது முந்தைய ஆண்டை விட 16.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஆயிரத்து 255 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 13.2 சதவீதம் அதிகரித்துள்ளதுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை