அரசன் செய்த தவறு! - கதை!


தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென்று பார்க்காமல் அவர் அதை அப்படியே விழுங்கி விடுவார்.

அவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றைத் தருவர். அதனால் புண்ணியம் சேருமென அங்கு வரும் பக்தர்கள் நினைத்தனர்.

ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை.

அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைக் கேலி செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையை அவரது கையில் வைத்தான்.

மகரிஷியும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்.

மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.

மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” எனச் சொல்லி விட்டு சென்றார்.

அதைக் கேட்ட மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்துத் தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, அவர்களது திருமணத்திற்கு வேண்டிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி வைத்தான்.

அதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாகக் கதை கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்”என்றனர்.

ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்தக் கணவன் “நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார்.

“அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப் பெண்.

“ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர்.

தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென்று பார்க்காமல் அவர் அதை அப்படியே விழுங்கி விடுவார்.


அவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றைத் தருவர். அதனால் புண்ணியம் சேருமென அங்கு வரும் பக்தர்கள் நினைத்தனர்.

ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை.

அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைக் கேலி செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையை அவரது கையில் வைத்தான்.

மகரிஷியும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்.

மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.

மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” எனச் சொல்லி விட்டு சென்றார்.

அதைக் கேட்ட மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்துத் தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, அவர்களது திருமணத்திற்கு வேண்டிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி வைத்தான்.

அதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாகக் கதை கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்”என்றனர்.

ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்தக் கணவன் “நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார்.

“அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப் பெண்.

“ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.