பதவி விலகினார் ரெலோவின் தவிசாளர்!


கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ரெலோ சார்பாக, தவிசாளர் பதவி வகித்த து.நடராயசிங்கம், (ரவி) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை, ஆட்சி காலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிளட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றைய தினம் (புதன்கிழமை) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடம் கையளிக்கப்பட்டு, பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதம், மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.