பெற்ற குழந்தையை குழியில் புதைத்த பெண்!


வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை புதைத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாயான 36 பெண்ணே கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.

அதன் பின்னர் குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

குறித்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட ஒருவர், கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில், பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தான் குழந்தையைப் பிரசவிக்கவில்லை என தாய் தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தாயாரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.