எதிர்க்கட்சி மாநாடு ரஷ்யாவில் முற்றுகை!


ரஷ்யாவில் எதிர்க்கட்சி மாநாட்டை முற்றுகையிட்ட பொலிஸார் சுமார் உயர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 200 பேரை தடுத்து வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் விதிமுறைகள் மீறப்பட்டு, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அபராதம் அல்லது ஒரு குறுகிய காலம் பொலிஸ் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் நடைபெறும் உள்ளூர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அதிகாரிகள் தொடர்ந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மிக முக்கியமான எதிர்க்கட்சி விமர்சகரான அலெக்ஸி நவல்னி சிறையில் அடைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.