பீஜிங் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு!!
சீனா – பிரித்தானிய கூட்டுப் பிரகடனத்தைச் பீஜிங் மதித்து நடக்கவில்லை என பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது.
ஹொங் கொங் தேர்தல் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்தும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து பிரித்தானியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஹொங் கொங் எதிர்காலம் குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் 1997 இல் ஹொங் கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது கூட்டுப் பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் தற்போது பீஜிங் அதை மீறியிருப்பது தெளிவாகத் தெரிவதாக தெரிவித்துள்ள பிரித்தானியா சட்டபூர்வமான கடமைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.
சீன மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில், ஹொங் கொங் தேர்தலின் புதிய நடைமுறைகள் குறித்துச் சீனா அறிவித்தது.
குறித்த சீர்திருத்தம் ஹொங் கொங்கிலுள்ள எதிர்த்தரப்பினரை ஒழித்து விடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை