பிரித்தானியாவில் சில்லறை விற்பனை உயர்வு!


முடக்கநிலையை எளிதாக்கும் திட்டங்கள் பாடசாலை சீருடைகள், கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதைத் தூண்டியதால், கடந்த பெப்ரவரி மாதத்தில் பிரித்தானியாவில் சில்லறை விற்பனை உயர்ந்துள்ளது.

பிரித்தானிய சில்லறை கூட்டமைப்பு (பி.ஆர்.சி), ஜனவரி மாதத்தில் கடுமையான விற்பனையைத் தொடர்ந்து, 9.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

தம்பதிகளின் வருகையால் காதலர் தினமும் உள்ளூர் வணிக வளாகங்களில் புள்ளிவிபரங்களை உயர்த்தியது.

ஆனால், எதிர்வரும் மாதங்கள் சவாலானதாக இருக்கும் என பிரித்தானிய சில்லறை கூட்டமைப்பு எச்சரித்தது.

தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின்படி, ஜனவரி மாதத்தில் சில்லறை விற்பனை 5.5 சதவீதம் குறைவாக இருந்தது.

அதன் குறிப்பான புள்ளிவிபரங்கள், உணவு அல்லாத பொருட்களின் விற்பனை, ஒன்லைனில் 82 சதவீதம் அதிகரித்துள்ளது, இருப்பினும் அவை மூடல்கள் காரணமாக கடைகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

தொழில்நுட்பம், தளபாடங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது. அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பத் தயாரானதால் பாடசாலை சீருடைகளின் விற்பனை உயர்ந்தது.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக்கடைகள் அத்தியாவசியமற்ற கடைகளிலிருந்து வியாபாரத்தை எடுத்ததால் உணவு விற்பனை தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. பெப்ரவரி முதல் மூன்று மாதங்களில் விற்பனை 7.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.