அதர்வாவுடன் இணையும் அருண்பாண்டியன்!!

 


நடிகர் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் நடித்த ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது


அதர்வா முரளி நடிப்பில் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகவுள்ள த்ரில் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் அதர்வா முரளியின் தந்தையாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


ஏற்கனவே ’டார்லிங்’ ’100’, ‘கூர்கா’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த முறை வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஒரு பீரியட் படம் என்றும் 90களில் நடக்கும் காட்சிகளும் தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வரும் என்றும் கூறப்படுகிறது


இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 8ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.