பொதுமகனை கடுமையாகத் தாக்கிய பொலிஸார்!


 வவுனியாவில், புளியங்குளம் பொலிசாரினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா - புளியங்குளம், இராமனுர் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பாலகிருஸ்ணன் வயது - 50 என்பவரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை சென்ற புளியங்குள பொலிசார் இடியன் துப்பாக்கி இருக்கின்றதா? என விசாரித்து குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற குறித்த நபரை பொலிஸ்நிலையத்தில் வைத்து பொலிஸார் தாக்கியுள்ளனர்.

பின்னர் மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் விடுதலை செய்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட நபர் பலத்த அடி காயங்களுக்குள்ளான நிலையில், இன்று வீட்டாரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.