வியாழேந்திரனுக்கு மனோ கணேசனின் சவால்!


 அபிவிருத்தியை எதிர்பார்த்து வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியை முன்னிறுத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று அதனை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேருக்கு நேர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது - தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது அமைச்சின் ஊடாக, அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த வியாழேந்திரனுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் முடிந்தால் அப்போது செய்த அபிவிருத்தி திட்டத்தில் அரைவாசியையாவது தற்போது செய்து காட்டுமாறு அவர் வியாழேந்திரனுக்கு சவால் விடுத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.