லெபனானில் குறி வைக்கப்படும் இலங்கையர்கள்!

 


லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தூதரகம் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பணம் சேகரிக்கின்றதா, என்பது தொடர்பில் இலங்கையர்கள் பலமுறை தூதரகத்திடம் விசாரித்துள்ளனர்.

இதுதொடர்பாக, லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.