பிரிந்து சென்றவர்களுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு!

 


தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக் கூடிய வடிவமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும்.

அதை செய்வதற்கான முழு முயற்சியையும் நாம் செய்ய தயாராக இருக்கின்றோம்.

ஏனைய கட்சிகள் இணைகின்ற போது தனிப்பட்ட கட்சிகள் தமக்கு அதிகாரங்களை கூட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது.

தேர்தலில் தோற்றவர்களை சேர்க்கக் கூடாது என நாம் யோசிக்கவில்லை. அது மக்களின் விருப்பம். ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.