புத்தர் சிலை உடைப்பு - இந்தியப்பிரஜை கைது!

 


குருநாகலில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இந்தியப் பிரஜை ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய – ரத்மலேவத்த பிரதேத்தில் உள்ள பௌத்த மக்கள் அதிகநேரம் வழிபாட்டில் ஈடுபடும் அரச மரத்தடியிலுள்ள புத்தர் சிலை நேற்று முன்தினம் அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து பிரதேச மக்கள் நேற்று குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.


அது தொடர்பில் விசாரணையை நடத்திய பொலிஸார், அப்பிரதேசத்தில் உள்ள இந்தியப்பிரஜை ஒருவரை கைது செய்தனர்.


கைதானவரிடம் நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிகாலை 02 மணியளவில் புகைப்பிடிப்பதற்காக புத்தர் சிலைக்கு அருகே உள்ள விளக்கின் உதவியுடன் தீ பெற்றக்கொள்ளச் சென்றதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றார்.


அந்த சந்தர்ப்பத்தில் இருவர் அங்கு நடமாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.