எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் விநாயகபுரம் 3 பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வயோதிப பெண் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார்.
அவர் தீயில் எரிந்த நிலையில், உறவினர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நோயினால் வேதனைகளை அனுபவித்து வந்துள்ளதாகவும் மனவிரக்தியின் காரணமாகவே அவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை