மேலும் ஒரு கொரோனா மரணம் வடக்கில் பதிவானது!!

 


வடக்கில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


இந்த தகவலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் கூறியுள்ளார்.


மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு குணமடைந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பி இருந்தார்.


இந்நிலையில் மீண்டும் அவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.