அணுசக்திகப்பலை முழு வீச்சுடன் உருவாக்கும் சீனா!


 சீனா, தனது நான்காவது விமானம் தாங்கி கப்பலை முழு வீச்சுடன் உருவாக்கி வருகிறது


இந்தநிலையில் இந்தக் கப்பல் அணுசக்தியால் இயங்கும் என நாட்டின் இராணுவத்திற்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோளிட்டு ‘தென் சீனா மோர்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த செய்தியில், ‘கப்பல் கட்டுபவர்கள் நான்காவது கேரியரை (விமானம் தாங்கி கப்பல்) நிர்மாணிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளனர். இது கப்பல் கட்டும் தொழிலுக்கு ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘பெயரிடப்படாத மற்றொரு ஆதாரம், சீன அதிகாரிகள் நான்காவது கேரியருக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஆய்வு செய்கின்றனர். ஆனால், இது சவால்கள் நிறைந்த ஒரு தைரியமான முடிவு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக தாமதமாகிவிட்ட நான்காவது கப்பலின் கட்டுமானம்   இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது.


தற்போது, ஏற்கனவே இரண்டு சீன விமானம் தாங்கிகள் இயங்கி வருகின்றன. மூன்றாவது கப்பல் இந்த ஆண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இவற்றில் எதுவுமே அணுசக்தி திறன் இல்லை.


2017ஆம் ஆண்டில் சீனா தனது பாதுகாப்புத் தொழில்களின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நுட்பத்தை நிரூபிக்கும் விதமாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலை அறிமுகப்படுத்தியது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.