வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!


கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

மாதாந்தம் 30 ஆம் திகதி குறிதத் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த வருகின்ற நிலையில் இன்றுடன் தொடர்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1863 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

உறவுகளை தொலைத்த எமக்கு சர்வதேமும், ஐக்கிய நாடுகள் சபையும் நீதியை பெற்றுத்தர வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.