இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக அரிந்தம் பக்சி நியமனம்!


 இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அரிந்தம் பக்சி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அனுராக் ஸ்ரீவாட்சவா செயற்பட்டு வந்த நிலையில், 

அனுராக்கிற்கு இந்தியாவின் வடமாநிலங்களுக்கான இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதையடுத்து அவரது வெற்றிடத்திற்கு அரிந்தம் பக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரிந்தம் பக்சி இலங்ககைக்கான உதவி இந்தியத்தூதுவராகவும் அதற்கு முன்னர் குரோசியாவிற்கான இந்தியத்தூதுவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.