மேலும் நால்வருக்கு வடக்கில் கொரோனா தொற்று கண்டறிவு!
வடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், மன்னாரில் இன்று காலை தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய நபரின் சடலத்தில் அன்ரிஜென் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதுடன் பின்னர், பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை