P2P தொடர்பில் கஜேந்திரன் எம்.பியிடம் வாக்குமூலம்!


 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் இன்றையதினம் தமிழ்த்தெசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயவாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச்செயலகத்தில் வைத்து போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாக பொலீஸாரினால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்தவாரம் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.