பாகிஸ்தான், இலங்கையின் அறிவிப்பால் கவலைகொண்டது!!
புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பியுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிற சவால்களால் இது இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தை மேலும் பாதிக்கும் என ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை உத்தரவில் கையெழுத்திட்டதாகக் சனிக்கிழமை (13) கூறினார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அது விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை