பரசூட் பயிற்சியின் போது ஒருவர் பலி, ஒருவர் காயம்!!
இலங்கை - விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
அம்பாறை - உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாகவும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை