நேற்று 135 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!
நாட்டில் நேற்றைய தினம் 135 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93,263 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 320 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 90,021 ஆக பதிவாகியுள்ளது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,662 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 360 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அதற்கமைவாக நாட்டில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 இல் இருந்து 579 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை