கொரோனா தொற்றில் இருந்து மேலும் 175 பேர் குணமடைவு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 631 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 848ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 91 ஆயிரத்து 631 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 622 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில், 595 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.