திருமண நிகழ்வுக்கு சென்றவர்களின் வான் ரயர் வெடித்து ஒருவர் படுகாயம்!


மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வேனின் டயரே இவ்வாரு வெடித்துள்ளது.

இதன்போது வேன் குடைசாய்ந்து அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ள நிலையில் வேன் முழுமையாக சேதமடைந்துள்ளது.

அத்துடன் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.